பொது சிவில் சட்டம் சிறுபான்மையின பெண்களை பாது காக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். ஈரோடு சோலார் பகுதியில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெற்றது.
இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: 2014 இல் பொருளாதாரத்தில் 11 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5 ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு பிரதமர் மோடி தான் காரணம்.
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண் டிய நேரம் வந்துவிட்டது. அத னால் தான் பிரதமர் தற்போது இது குறித்து அறிவித்துள்ளார். பொதுசிவில் சட்டம் என்பது காலத்தின் கட்டாயம் என்று அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, வழக்குகளில் சிக் கிய இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்தார் ஆனால், தற்போதைய முதல்வர், ஊழல் வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜியை காப்பாற் றத் துடிக்கிறார்.
எல்லா ஊழல்வா திகள் மீதும் தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுத்தால் தமிழக அமைச்சரவையே காலியாகிவிடும். மக்களவைத் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.
தமிழகத்தில் 39 தொகுதிக ளிலும் பாஜக கூட்டணி வெற்றிபெறும். தமிழக பாஜக சார்பில் வெற்றிபெறுபவர்கள் கேபினட் அமைச்சர்களாக பதவி வகிப்பார்கள். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
அறிவிப்புப் பதாகை
இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளும் கைப்பேசி செயலி குறித்த அறிவிப்புப் பதாகையை வெளியிட்டார். முன்னதாக, கீழ்பவானி பாசனத்தின் தந்தை என போற்றப்படும் தியாகி ஈஸ்வரனின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய அண்ணாமலை, அவரது குடும்ப வாரிசுகளைக் கௌரவித்தார்.
கூட்டத்தில், மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சி.சரஸ்வதி, ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வி.சி.வேதானந்தம், பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் ஆற்றல் அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.