சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராயம் சார்பில் தமிழ் வளர்ச்சியில் வைணவத்தின் பங்கு என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் தலைமை வகித்தார். புதுச்சேரி மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
இதில் பல்வேறு பகுதி களிலிருந்து ஜீயர் சுவாமிகள், வைணவ பீடங்களின் மடாதிபதிகள், வைணவ ஆலயங்களின் குருக்கள் கலந்து கொண் டனர். கருத்தரங்கில், எஸ்.ஆர்.எம்.பல் கலைக்கழக தமிழ் பேராய தலைவர் கரு.நாகராஜன் பேசுகையில், தமிழ் வளர்ச்சியில் வைணவம் முக்கிய பங்கு வகிக்கிறது.
திருமாலின் பெருமைகளை வைணவ பாசுரங்கள் எடுத்துக் கூறுகின்றன. சங்க இலக்கியங்கள், சிலப் பதிகாரம், அதற்கு பின் வந்த பல்வேறு நூல்கள் திருமாலின் பெருமைகளை எடுத்துரைக்கின்றன. பக்தியையும், பழந்தமிழையும் வளர்த்த பெருமை வைணவத்தை சேரும் என்றார்.
கருத்தரங்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராய ணன், மன்னார்குடி ராமானுஜ ஜீயர் சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுணிகள் மடம் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், திருவரங்கம் கோயில் பெரியநம்பி சுந்தர்ராஜாச்சாரி சுவாமி கள், திண்டிவனம் கம்பன் கழக பொதுச் செயலாளர் க.ஞானஜோதி சரவணன் உள்ளிட்ட பலரும் பேசினர். முடிவில் எஸ்.ஆர்.எம்.தமிழ்துறை தலைவர் ப. ஜெயகணேஷ் நன்றி கூறினார்.