fbpx
Homeபிற செய்திகள்குழந்தையின் ஆபரேஷனுக்குரூ.3.5 லட்சம் நிதி வழங்கிய முன்னாள் மாணவர்கள்

குழந்தையின் ஆபரேஷனுக்குரூ.3.5 லட்சம் நிதி வழங்கிய முன்னாள் மாணவர்கள்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள புனித பால் பள்ளியில் 1985 & -1999 ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சார்பாக வெள்ளி விழா சந்திப்பு கொண் டாட்டம் நடைபெற்றது. முன்னாள் மாணவர் வழக்கறிஞர் சினு வரவேற் புரை ஆற்றினார்.

பள்ளியின் முதல்வர் அருட்திரு சைமன் அந்தோனி ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் முதல்வர் அருள் தந்தை தாமஸ் நல்லாரிசிர் வழங்கினார். முன்னாள் ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னாள் மாணவர் ரூபன் பாக்யராஜ் நன்றி கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் ஆசிரியர் கள் மற்றும் மாணவர்கள் இணைந்து குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கினார்கள்.

150-க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நடைபெற்றது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய பெரியாக்குறிச்சியை சேர்ந்த 3 வயது குழந்தை ரோஷித்
மற்றும் பெற்றோர்கள் ரேவதி மற்றும் விஜயகுமார் ஆகியோ ருக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உதவித் தொகையாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு முன்னாள் மாணவர்கள் சசிகுமார், சினு, அமரேஷ், ரூபன் பாக்கியராஜ், கங்காதரன், நடராஜன், பால் பிரவீன், ஜனார்த்தனன், ராஜசேகர், சங்கர், ஹரிநாராயணன், பரமகுருநாதன், பிரதீப் குமார், முகமது இம்ரான், அபூபக்கர் சித்திக்,ராம் பிரசாத், ஜோசப் ஸ்வர்ணகுமார், விஜய் வெங்கடேஷ், நிர்மல் பிரேம் குமார்,அருண் பிரசாத்,ஆல்பர்ட், சிவராஜ், ஷேக் ரஹ்மத்துல்லாஹ், மணிகண்டன், ஜெரால்டு டோமினிக் ஆரோக்கியராஜ், பிரவீன்குமார், சரவணகுமார்,ஸ்ரீ கோபால், யாசர் அரபத்,சேவியர் பாபிட், சங்கர், அருள்செல்வம், ஷாஜி, ஆரோக்கியராஜ், ராஜா ரஞ்சித் சிங், சுரேஷ் குமார், செல்வகுமார், சிவகுமார் மற்றும் பலர் ஒருங்கிணைத்தார்கள்,
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img