கோவை ஆர். எஸ்.புரம் டி.பி.ரோட்டில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி உயர்தர கண் சிகிச்சை மருத்துவமனை நவீன வசதிகளுடன் புதிதாக தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவ மனையின் தலைவர் டாக் டர் ஏ.கே.ஸ்ரீதரன், நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதரன் தலைமை மருத்துவ இயக்குனர் டாக்டர் மிருதுளா ஆகியோர் கூறியதாவது:- இந்த டிரினிட்டி சூப்பர் ஸ்பெ ஷாலிட்டி கண் மருத்துவ மனையின் திறப்பு விழா வருகிற 1-ந்தேதி காலை 10 – 30 மணிக்கு நடக்கிறது.
விழாவில் சினிமா நடிகை ராதிகா சரத்குமார் கலந்துகொண்டு புதிய கண்மருத்துவமனையை தொடங்கிவைக்கிறார் மேலும் இந்த கண் மருத்துவமனையில் சர்வதேச தரம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் சிறப்பான கண் சிகிச்சை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
இங்கு இயங்கும் மருத்துவமனையில் மருத்துவ இயக்குனர் டாக்டர் முகமது சபாஜ் தலைமையில் இயங்கும். கேரளாவில் 8 கண் மருத்துவமனைகள் உள்ளன. மேற் கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.



