கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் விளாங்குறிச்சியில் தனியார் பங்களிப்புடன் 1500 மரக்கன்றுகள் நடும் பணியை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தொடங்கி வைத்தார்.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், உதவி பொறியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளனர்.



