fbpx
Homeபிற செய்திகள்கோவை ஆட்சியர் அலுவலக டீ கடையில் புகுந்த நாகப் பாம்பு: ஊழியர்கள் ஓட்டம்

கோவை ஆட்சியர் அலுவலக டீ கடையில் புகுந்த நாகப் பாம்பு: ஊழியர்கள் ஓட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பின்புறம் தமிழக அரசின் டேன் டீ நிறுவனத்தின் டீக்கடை செயல்பட்டு வருகிறது. நிலையில் இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்த போது கடைக்குள் பாம்பு ஒன்று இருந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடையின் ஊழியர் தகவல் அளித்ததன் பேரில் கோவை தெற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் விரைந்து வந்து கடைக்குள் இருந்தது நாகப்பாம்பு என கண்டறிந்தனர்.
பின்னர் அந்த 5 அடி நீள நாகப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அடிக்கடி பாம்புகள் தென்படுகிறது.
குறிப்பாக வளாகத்தின் பின்புறம் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடம்,
அங்குள்ள புதர்களில் அதிகளவு பாம்புகள் நடமாட்டம் இருப்பதால் பாம்புகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் வளாகத்திற்குள் மண்டி கிடக்கும் புதர்கள் குப்பைகள் அனைத்தையும் அகற்ற வேண்டுமெனவும், தெரிவித்து வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img