கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் சசி அவென்யூ பகுதியில் 3300 மரக்கன்றுகள் மியாவாக்கி அடர் வனம் அமைக்கப்பட்டுள்ள பகுதியை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் பமிலா பைஜால் & BMZ அதிகாரிகள், ஜெர்மன் தூதரக அதிகாரி மற்றும் CIZ-SUID கோவை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பார்வையிட்டு இத்திட்ட செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
உடன் துணை ஆணையாளர் ஷர்மிளா, மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், நகரமைப்பு அலுவலர் கருப்பாத்தாள், உதவி ஆணையாளர் முத்துராமலிங்கம், உதவி நகரமைப்பு அலுவலர் (திட்டம்) ஜெயலட்சுமி, உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் குணசேகரன், ZF நிறுவனத்தினர், மாநகராட்சி அலுவலர்கள், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் உள்ளனர்.



