பெரியநாயக்கன் பாளையத்திலிருந்து அத்திப் பாளையம் வரை செல்லும் தார்சாலையை புதிதாக அமைப்பதற்கென பணியை நேற்று (திங்கள்கிழமை) நடந்த பூமிபூஜையில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.
பெரியநாயக்கன் பாளையத்திலிருந்து கோவை விமான நிலை யம், சரவணம்பட்டி உள் ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் இச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாகக் கோரி வந்தனர்.
இந்நிலையில் இச்சாலையை புதிதாக அமைக்க தமிழக அரசு பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி 18 ஆவது வார்டுள்பட்ட குப்பிச்சி பாளையத்திலிருந்து கருங்குட்டை வரையிலான சாலைக்கு ரூ.1.75 கோடியும், இடிகரை பேரூராட்சி க்குள்பட்ட கருங்கு ட்டையிலிருந்து அத்திப் பாளையம் நால் ரோடு வரையிலான சாலைக்கு ரூ.1 கோடியும் நிதி ஒதுக்கியுள் ளது.
ஆக மொத்தம் ரூ. 2.75 கோடி செலவில் இந்த 5 கிலோமீட்டர் வரையிலான சாலை புதிதாக அமைக்கப்படுகிறது. இதற்கென ஜி.கே.டி பள்ளி அருகில் நடந்த பூமிபூஜைக்கு பெ.நா.பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் வெ.விஷ்வ பிரகாஷ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் நந்தகுமார்,18ஆவது வார்டு கவுன்சிலர் சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பணிகளைத் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பேரூராட்சிகள் துணை இயக்குநர் துவார கநாத் சிங், மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், துப்புரவு ஆய்வாளர் பரமசிவம், பேரூராட்சிக் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.