கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் அம்மாசிகோனார் வீதியில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் 262 மீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் கட்டும் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
உடன் மாமன்ற உறுப்பினர் பேபிசுதா ரவி, உதவி ஆணையர் சரவணன், செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் ஹரிபிரசாத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.