தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக ஆனைமலை வட்டாரம், கோட்டூர் இலங்கை தமிழர் முகாமில் ரூ.5.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 112 புதிய குடியிருப்புகளை திறந்து வைத்ததையடுத்து, முகாமில் உள்ள நபர்களுகுகு சமையல் பாத்திர தொகுப்புகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.
அருகில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, கோட்டூர் பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன், துணை தலைவர் கிருஷ்ணவேணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அருண், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வட்டாட்சியர் ஸ்ரீரேகா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.