கோவை உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியில் சுன்னத் ஜமாத் யூத் பெடரேசன் சார்பில் 12 ஆயிரம் பேருக்கு மிலாடி நபியை முன்னிட்டு இலவ சமாக குஸ்கா வழங்கப்பட் டது. மிலாடி நபியை முன்னிட்டு கோவையில் உள்ள பள்ளிவாசல்களில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு சில இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இலவசமாக பிரியாணி மற்றும் குஸ்கா ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உக்கடம் தீம் நகர் பகுதியில் உள்ள சுன்னத் ஜமாத் யூத் பெடரேசன் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக குஸ்கா வழங்கப்பட்டது.
12000 பேருக்கு இலவசமாக குஸ்கா வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் அதிகாலை யிலேயே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று குஸ்காவினை வாங்கி சென்றனர்.