fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் பதவி ஏற்றுக்கொண்டார்

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் பதவி ஏற்றுக்கொண்டார்

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் பதவி ஏற்றுக்கொண்டார் முதலில் கோப்புகளில் உள்ள அனைத்து விஷயங்களையும் படித்து அதற்குப் பின்பு கையெழுத்திட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது எனக்கு இரண்டு வருடம் மாநகராட்சி பணிகளில் அனுபவம் உள்ளது.சென்னையில் வெள்ளதடுப்பு பணிகள், மாநகராட்சி பணிகள், பல்வேறு அதிகாரிகளும் எனக்கு எப்படி பணி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

அதேபோன்று பொதுமக்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக செயல்படுத்துவேன் என்று கூறினார்.

மேலும் கோவையில் முக்கிய பணிகளான பாதாள சாக்கடை சாலை மேம்படுத்துவது தன்னார்வலர்கள் இடையே இணைந்து கோவை மாநகராட்சி பணிகளை துரிதப்படுத்துவேன் என்று தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மத்தியில் என்ன பிரச்சனை என்பதை கேட்டறிந்து அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதை சக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அதற்கு உரிய தீர்வை ஏற்படுத்துவேன் என்றும் கோவை மாநகராட்சியில் எந்த பணிகள் என்றாலும் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் பொதுமக்களில் முதல் மனுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பாக கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளிலும் விதவைகள் முதியவர்கள், திருநங்கைகள் போன்றவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு வார்டிலும் புகார் மனு பெறக்கூடிய பெட்டியை வைக்க வேண்டும் என்ற மனுவை செல்வராஜ் கொடுத்துள்ளார்.

இதை புதிய மாநகராட்சி ஆணையாளர் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img