கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் ஸ்ரீரங்கா மெஜஸ்டிக், ஜி.என்.மில் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலை தூர்வார சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
உடன் மாமன்ற உறுப்பினர் சுமதி, உதவி ஆணையர் நூர் அகமது (பொ) உதவி நகரமைப்பு அலுவலர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் உத்தமன், ஜெயின்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.