முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் நகர்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைத்தார்.
அதன்படி கோவை மாநகராட்சி டாடாபாத் பகுதியில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையர் சிவகுமார், மண்டலக்குழு தலைவர் மீனா லோகு, மாநகர சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன், மாநகர சுகாதார அலுவலர் தாமோதரன், மாமன்ற உறுப்பினர் கமலாவதி போஸ், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அருணா ஆகியோர் உள்ளனர்.