கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், டவுன்ஹால் பகுதியில் கோவை மாநகராட்சி மற்றும் கிரெடாய் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட மணிக்கூண்டு கடிகார கோபுரத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
உடன் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி துணை ஆணையாளர் சிவகுமார், கிரெடாய் அமைப்பினர் குகன், இளங்கோவன், அரவிந்தகுமார், ராஜீ, ராமசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.