அசோசியேஷன் ஆப் கன்சல்டிங் சிவில் என்ஜினியர்ஸ் (இந்தியா) கோவை மையத்தின் தலைவராக ஏ. சுதாகர் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
கட்டுமானத் தொழில் வளர்ச்சி, கட்டுமானப் பொறியாளர்களின் லட்சியங்களை ஊக்குவித்தல், அவர்களுக்கான தொழில்நுட்ப அறிவை விரிவாக்கம் செய்தல், கட்டுமானத் தொழில் சார்ந்த மாநாடு, கூட்டம், கருத்தரங்கு உள்ளிட்டவைகளை பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அசோசியேஷன் ஆப் கன்சல்டிங் சிவில் என்ஜினியர்ஸ் (இந்தியா) அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் இதற்கு 32 மையங்கள் உள்ளன.
மேலும் கோவை மையம் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் கட்டுமான நிறுவனங்கள், இந்திய கட்டிடக் கலைஞர்கள் சங்கம், கோயம்புத்தூர் பில்டர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம், இந்திய கட்டிடக் கலைஞர்கள், இந்திய கான்கிரீட் நிறுவனம் போன்ற பல சங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை மையத்தின் புதிய தலைவர் மற்றும் அலுவலக நிர்வாக குழு பதவி ஏற்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள ரெசிடென்சி டவர்சில் நடைபெற்றது. கோவை மையத்தின் தலைவராக டாக்டர் ஏ.சுதாகர் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் புதுடெல்லி, கட்டுமானத் தொழில் மேம்பாட்டுக் கவுன்சில், இயக்குனர் ஜெனரல் பி.ஆர்.ஸ்வரூப், கட்டுமான தொழில் மேம்பாட்டு கவுன்சிலின் கார்ப்பரேட் விவகாரங்கள் மூத்த இயக்குனர் அசுதோஷ் பரத்வாஜ், ஓய்வு பெற்ற தமிழ்நாடு போலீஸ் சூப்பிரெண்ட் கலியமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு கட்டுமான சங்கங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டன.