தெற்கு மண்டலம் வெள்ளலூரில் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குறிச்சி குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டப்பணிகளில் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். உடன் தெற்கு மண்டல உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்கள் மதியழகன், கீதாதேவி, செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.