ஐடிசி நிறுவனத்தின் கிளாஸ்மேட், மாணவர்க ளின் புத்திகூர்மையை ஊக்குவிக்கும் வகை யில் ‘எடுகேம்ஸ் இன்பினிட்டி’ என்னும் புதிர் போட்டியை கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலி உடன் இணைந்து நடத்த உள்ளது.
இதில் பங்கேற்று வெற்றி பெறுபவர்கள் ஹாங்காங் டிஸ்னி லேண்டை சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லப்பட இருக்கிறார்கள்.
இந்நிலையில் கிளாஸ் மேட் நோட்புக்கின் கடை சிப் பக்கத்தில் ‘எடுகேம்ஸ் இன்பினிட்டி’ புதிர் போட்டி இடம்பெறும். மாணவர்கள் நோட்புக்கின் கடைசிப் பக்கத்தை ஸ்கேன் செய்து ஒவ்வொரு நாளும் ஒரு புதிய விளையாட்டை விளையாடலாம்.
இந்த போட்டி குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியா முழுவதும் உள்ள 30 நகரங்களில் கிளாஸ்மேட் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது. இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர்களுமான இரட்டையர்கள் பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோர் 30 நாட்களும் இந்த புதிர் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.
இது குறித்து பிரக் ஞானந்தா கூறுகையில், ‘எடுகேம்ஸ் இன்பினிட்டி’ என்பது வெறும் விளையாட்டை மட்டும் பற்றி யது அல்ல. இது உங்கள் மனதைப் பயிற்று விப்பதற் கான ஒரு வேடிக்கையான மற்றும் பயனுள்ள வழியாகும்“ என்றார்.
வைஷாலி, கற்றலை மகிழ்ச்சியானதாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கி உள்ள கிளாஸ்மேட்டை பார்க்கையில் ஆச்சரிய மாக உள்ளது என்று தெரிவித்தார்.
இது குறித்து ஐடிசி நிறுவனத்தின் கல்வி மற்றும் எழுதுபொருள் தயாரிப்புகள் வணிகப் பிரிவின் தலைமை நிர்வாகி விகாஸ் குப்தா கூறுகையில், “கற்றல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், படைப்பாற்றல், ஆர்வம் மற்றும் வேடிக்கையான முயற்சி ஆகியவற்றின் உணர்வு அந்த நம்பிக் கையை உயிர்ப்பிக்க வேண் டும் என்றும் நாங்கள் எப்போதும் நம்புகிறோம்“ என்றார்.
இந்தப் போட்டியானது அசாமில் குவஹாத்தி, கர்னாடகாவில் பெங்களூர், ஹூப்ளி, மங்களூர், மைசூர், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சென்னை, வேலூர் மற்றும் புதுச்சேரி உள்பட கேரளா, ஆந்திரா, குஜராத் மற்றும் மகாராஷ் டிராவின் முக்கிய நகரங்கள் என 30 நகரங்களில் நடைபெற உள்ளது.