வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவும் அதன் திரைமறைவு கூட்டாளிகளாக அதிமுகவை தோற்கடிக்க புரட் சிகர இளைஞர் முன்னணி பிரச்சாரம் மேற்கொள்ளும் என தெரிவித்தனர்.
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மலரவன் தலைமையில் செய் தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது மலரவன் கூறியதாவது: கடந்த 10 ஆண்டு கால பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியால் மக்கள் வெறுப்பில் உள்ளனர். மழை வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது வராத பிரதமர் மோடி ஓட்டுக்காக ஓடோடி வருகிறார்.
மேலும் சுயேட்சை அமைப்புகளான தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத் துறை போன்றவை பாஜக வின் கைக்கருவிகளாக உள் ளது. மாநில அரசுகளின் அதிகாரங்களை பறித்து மத்திய அரசிடம் கையேந்தும் நிலையை உருவாக்கி உள்ளது.
மதவாத பிற்போக்கு கட்சியாக பாஜக உள்ளது. ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிமுக தற்போது வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்ள தனித்து போட்டியிடுகிறது. பாஜக விடம் கூட்டு இல்லை என நாடகமாடுகிறது.
பாஜகவை வீழ்த்தக் கூடிய அணியாக திமுக தலைமையிலான கூட்டணி உள்ளது. அவர்களுக்கு ஆதரவாக புரட்சி கர இளைஞர் முன்னணி பிரச்சாரம் மேற்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவி, ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செயப் பிரகாசம், கோவை புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.