fbpx
Homeபிற செய்திகள்பெங்களூருவில் கழிவுநீர் சுத்திகரிப்பு, பராமரிப்பு பணிகளுக்கு தோஷிபா நிறுவனத்துடன் ஒப்பந்தம்

பெங்களூருவில் கழிவுநீர் சுத்திகரிப்பு, பராமரிப்பு பணிகளுக்கு தோஷிபா நிறுவனத்துடன் ஒப்பந்தம்

தோஷிபா வாட்டர் இந்தியா நிறுவனம், தென்கிழக்கு ஆசியா, வடக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள் உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் பொது குடிநீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைகளில் நீர் சுத்திகரிப்பு வசதிகள் போன்றவற்றுக்கான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (இ.பி.சி), இயக்கம் மற்றும் பராமரிப்பு (ஓ&எம்) தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

அதிகரிக்கும் மக்கள் தொகையை எதிர்கொள்ளவும், திருத்தப்பட்ட சமீபத்திய கழிவுநீர் தரத்துடன் இணங்குவதற்கும் கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, தோஷிபா வாட்டர் இந்தியா நிறுவனம் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் கடுபீசனஹள்ளி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மயிலாசந்திரா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தொட்டபேலே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், இதர ஐந்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கான மேம்படுத்துதல் மற்றும் மறுசீரமைப்பு, இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.

இத்தகவலை தோஷிபா வாட்டர் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஹிரோகி கோபயாஷ தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img