fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவையில் பக்ரீத் சிறப்பு தொழுகை

இன்று நாடுமுழுவதும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் குடும்பத்துடன் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இயன்றதை பிறருக்கு உதவவேண்டும், என்ற உயரிய நோக்கோடு இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ஹஜ் பயனமும் இந்த மாதத்தில் நடைபெற்று, அங்கு பொதுமக்கள் தங்களின் தொழுகை கடமையை நிறைவேற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பக்ரீத் தொழுகை முடிந்த பிறகு பணவசதி படைத்தவர்கள் தாங்கள் வளர்த்திவந்த ஆடு, மாடுகளை பலியிட்டு உற்றார், உறவினர்களுக்கும், ஏழை மக்களுக்கும் வழங்குவார்கள்.
பொருளாதாரத்தில் நடுத்தரமான மக்கள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் கூட்டாக சேர்ந்து கூட்டு குர்பான் என்ற பெயரில் அனைவருக்கும் உதவுவார்கள்.

இந்த நிலையில், கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிக் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட மக்கள் ஒருவருக்கொருவர் ஆரத்த ழுவி தங்களது மகிழ்ச்சியை யும், வாழ்த்து களையும் பரிமாறிக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img