பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அண்ணாவின் சிலை மற்றும் படங்களுக்கு
மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை திமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமையில் சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் இருந்து காந்திபுரம் வரை அமைதி பேரணி நடைபெற்றது.
இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அண்ணாவின் புகைப்படத்தை ஏந்தியபடி சென்றனர்.
காந்திபுரம் பகுதியில் உள்ள அண்ணாவின் சிலை முன்பு பேரணி நிறைவு பெற்றதை தொடர்ந்து அண்ணாவின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு திமுகவினர் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.