fbpx
Homeபிற செய்திகள்கோவையில் தியானத்தில் ஈடுபடும் நடிகை சமந்தா

கோவையில் தியானத்தில் ஈடுபடும் நடிகை சமந்தா

நடிகை சமந்தா மன அமைதிக்காக கோவையில் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழ் படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் சமந்தா தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதனிடையே தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

இந்த சூழலில், சமந்தாவுக்கு உடல் நலக் கோளாறும் ஏற்பட்டது. அதனால் முழுமையாக அவரால் திரைப்படங்களில் கவனத்தை செலுத்த முடியவில்லை.

பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த சமந்தா தற்போது அடிக்கடி போட்டோ சூட் நடத்தி, அவற்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

தியானம் செய்வதில் ஆர்வம் உள்ள சமந்தா அவ்வப்போது கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சென்று வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஈஷா யோகா மையம் வந்துள்ள சமந்தா அங்கு தங்கி தியானம் மற்றும் யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

மேலும், ஈஷா மையத்தில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு உணவு அளித்தும், சூழலை ரசித்தும் தனது பொழுதை இனிமையாக கழித்து வருகிறார் சமந்தா.

படிக்க வேண்டும்

spot_img