திருப்பூர் மாவட்டம் வீரபாண்டியில் அரசு உயர்நிலைப் பள்ளியாக இருந்தபோது 1994 -2004ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார்.
அதைத் தொடர்ந்து கோகிலா, கௌரி, கங்கா, செல்வமணி, வசந்தா, சுசிலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்கள் சார்பாக நினைவுப் பரிசும் பொன்னாடையும் வழங்கி கௌரவித்தனர்.
பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக மாணவர்களின் உரையாடல்களும் நடைபெற்றது.



