மத்திய பிரதேசம், குவாலியர் நகரில் நடை பெற்ற முதலாவது சிபிஎஸ்ஈ பள்ளிகளுக்கான தேசிய கராத்தே போட்டியில் 220-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன.
நவம்பர் 19 முதல் 21 வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், விஜயகீர்த்தி, 9ம் வகுப்பு, வேலம்மாள் போதி பள்ளி, வெள்ளி பதக்கம் வென்றார்.
சுஹானி, வகுப்பு 7, பிரதிஷா, வகுப்பு 12, சிறப்பான பங்களிப்பு வழங்கி ஷோரிகாய் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
அவர்களுடைய பயிற்சியாளர் ஆர்.சுரேஷ் தலைமையில் (ஆசிய நடுவர்) ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்த போது, அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு தரப்பட்டது.



