fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவிக்கு விவேகானந்தா சர்வதேச அமைதிக்கான விருது

ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவிக்கு விவேகானந்தா சர்வதேச அமைதிக்கான விருது

அம்ருதபுரி ஆசிரமத்தில் ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவிக்கு விவேகானந்தா சர்வதேச அமைதிக்கான விருது வழங்கப்பட்டது. உலகளாவிய அளவில் அம்மா செய்து வரும் சமூக நலத் திட்டங்களை இந்த விருது அங்கீகரிக்கிறது.

இவ்விழாவில், விவேகானந்தா சர்வதேச உறவுகள் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ககன் மல்ஹோத்ரா மற்றும் தலைமை ஆதரவாளர் ரவிகுமார் ஐயர் ஆகியோர் விருதை அளித்து கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் இந்தியாவின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொண்டுள்ள சனாதன தர்மத்தை கற்றுக்கொள்ளவும், பிறருக்கு கற்பிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவி கூறினார்.

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையின் செய்தியும் இதுவே என்றும், இயற்கை அனைவருக்கும் பொதுவானது என்று கருதினால் உலகில் அமைதி நிலவும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து ககன் மல்ஹோத்ரா, தர்பான் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சாரிகா பன்ஹால்கர், ஸ்வநாத் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரேயா பாரதியா, சக்ரா அறக்கட்டளையின் தலைவர் ஏ. ராஜசேகரன் போன்றோர் இந்த விழாவில் உரையாற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img