ஈரோடு மாநகராட்சி 51 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
ஈரோடு மாநகராட்சி 51வது வார்டுக்கு உறுப்பினர் பதவிக்கு பலரும் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் காஞ்சனா மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் நேற்று தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்.
இதனையடுத்து திமுகவைச் சேர்ந்த விஜயலட்சுமி 51 வது மாமன்ற உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



