fbpx
Homeபிற செய்திகள்தடகளத்தில் அசத்திய தமிழக வீரர்கள்

தடகளத்தில் அசத்திய தமிழக வீரர்கள்

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில், தமிழ்நாடு மண்டல அளவிலான தடகளப் போட்டியை, கடந்த 1 மற்றும் 2 தேதிகளில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்தியது.

சென்னை சிஷ்யா இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
தமிழ்நாடு மண்டலத்தில் இருந்து 43 பள்ளிகளைச் சேர்ந்த 930 மாணவர்கள் பங்கேற்றனர்.

ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரும், கோல்கீப்பராக ஓய்வு பெற்றவருமான முனீர் சேட், இப்போட்டிகளை துவக்கி வைத்தார்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று, திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெற ஒத்துழைத்தனர்.
தமிழக வீரர்கள் 59 தங்கம், 37 வெள்ளி, 23 வெண்கல பதக்கங்களைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய நிலைகளில் மாணவர்களும், மாணவிகளும் வென்றது அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.

சப்-ஜூனியர் பிரிவில் மாணவர் எஸ்.சர் வேஸ், ஜூனியர் பிரிவில் மாணவர்கள் ஆர்.பிரஜித், எஸ்.சவான், ரெஜினால்ட், சீனியர் பிரிவில் மாணவர்கள் ரோ ஹித், விஷ்ணுபிரியன், சீனியர் மாணவி எம்.கரீஷ்மா ஆகியோர் தனி சாம்பியன் ஷிப் பட்டங்களைப் பெற்றனர்.

அசைக்க முடியாத ஜூடியன்ஸ் 119 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியனாக திகழ்ந்தது.புனேவில் வரும் நவம்பர் 3-ம் தேதி துவங்கும் தேசிய தடகளப் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 63 பேரில் 38 தட கள வீரர்களுக்கு இத்தருணம் பெருமைப்படக்கூடியதாக அமைந்தது.

மாணவர்களின் அளப்பரிய முயற்சி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது. பள்ளி முதல்வர் டாக்டர் பி.பி.தனராஜன், முதல்வர் டாக்டர் சரோ தனராஜன், செயல் இயக்குநர் டாக்டர் சம்ஜித் தனராஜன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img