கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வீ.வி.எம்.நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்ல பைப் லைன் அமைக்கும் பணியை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் விரைவாக பணியை செய்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
உடன் உதவி ஆணையாளர் சங்கர், மாமன்ற உறுப்பினர் ஷர்மிளா, உதவி செயற்பொறியாளர்கள் இராமசாமி, புவனேஸ்வரி, உதவி பொறியாளர்கள் தியாகராஜன், சத்தியமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



