நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தலைமையில் நேற்று (நவ.18) நடைபெற்றது.
விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 89 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தோட்டக் கலைத்துறையின் கீழ் செயல்படும் அரசு தோட்டக் கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் செடிகளின் விபரங்களை விலையுடன் கூடிய காட்சி பதாகைகள் வைக்க வேண்டும்.
PMKISAN பயனாளிகளில் 13-வது தவணைத் தொகை பெற இயலாத பயனாளிகளின் குறை களை தீர்க்கும் வகையில், கூடலூர் வட்டாரத்தில் முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதுமலை மறுகுடியமர்வு மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தனியாக ஒரு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
மாவட்டத்தில் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான அனுமதியினை ‘Nilgiris Tree Cutting Service’ என்ற இணையதளம் மூலம் விண் ணப்பித்து பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்களுக்கு TDS தொடர்பாக கூட்டம் நடத்தி அதன் விவரங்களை எடுத்துரைத்தமைக்கு, ஆட்சியர் தோட்டக்கலை இணை இயக்குநர், முன்னோடி வங்கி மேலாளர் ஆகியோருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டம்
முன்னதாக வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலம் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டம் (PMFME) மூலம் கூடலூரை சேர்ந்த பழங்குடியின பெண் மஞ்சுளா என்பவருக்கு ரூ.5.70 லட்சம் (35% மானியம்)‘Home made chocolate’ உற்பத்தி செய்வதற்காக கடன் உதவிகளை வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, இணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை (பொ) ஷிபிலா மேரி, உதவி இயக்குநர்கள் சாம்சாந்த குமார் (ஊராட்சிகள்) இப்ராகிம்ஷா (பேரூராட்சிகள்) விவசாய சங்கங்களைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.