fbpx
Homeபிற செய்திகள்விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ அறிவுறுத்தல்

விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ அறிவுறுத்தல்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக ஆலோசனை கூட்டம் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பேசுகையில், நல்லம்பள்ளி பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் அதிக லாபம் தரக்கூடிய விவசாய முறை மற்றும் சாகுபடி அதிகரிக்கும் தொழில் நுட்பத்தை எடுத்துக்கூறி தரமான விதைகளை வழங்க வேண்டும்.

மூன்று ஆண்டுகளில் பலன் தரக்கூடிய தென்னை, கொய்யா, மாம்பழம், சப்போட்டா சாகுபடி குறித்து எடுத்துக் கூற கேட்டுக்கொண்டார்.

நல்லம்பள்ளி விதை கிடங்கை பார்வையிட்ட அவர் கையிருப்பில் நெல், காராமணி, நிலக்கடலை இருப்பு எவ்வளவு உள்ளது என்பது குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

படிக்க வேண்டும்

spot_img