fbpx
Homeதலையங்கம்விரும்பத்தகாத நிகழ்வுகளுக்குத் தான் வழி ஏற்பட வாய்ப்பு!

விரும்பத்தகாத நிகழ்வுகளுக்குத் தான் வழி ஏற்பட வாய்ப்பு!

கடுமையான எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக நாடு முழுவதும் 75 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட தெரு கிராமமும் உண்டு. ஆனால் இந்தப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்று விவசாயிகள் மீண்டும் போராடத் தொடங்கி இருக்கிறார்கள். தமிழக அரசின் முடிவையும் முதல் அமைச்சர் ஸ்டாலின் தெளிவுபடுத்தி இருக்கிறார்.


ஹைட்ரோ கார்பன் உற்பத்திக்காக ஆழ்குழாய் கிணறுகளை அமைத்தால் வளமான காவிரி படுகை பகுதியில் விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், இந்தப்படுகை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி செய்ய ஆழ்குழாய் கிணறுகளை அமைக்கக்கூடாது என்பது தமிழ்நாடு அரசின் உறுதியான கொள்கையாகும்.


மத்திய அரசு ஏலம் விட்டாலும் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதியினை தமிழக அரசு ஒரு போதும் வழங்காது என்றும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்கள்.

ஒன்று- பாதிப்பு இல்லாத நலம் பயக்கும் திட்டமாக இருந்தால் அதுபற்றி ஆதாரப்பூர்வமாக மக்கள் மத்தியில் விளக்கி அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் மக்களும், மாநில அரசும் விரும்பாத ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முனைவது விரும்பத்தகாத நிகழ்வுகளுக்குத் தான் வழிவகுக்கும்

படிக்க வேண்டும்

spot_img