பால்விலை,மின் கட்டண உயர்வை கண்டித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன் நகர தலைவர் உமா சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல் சிறுமுகை நால் ரோட்டில் காரமடை கிழக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோபால கிருஷ்ணன், கலைவாணி பழனிச்சாமி, மூர்த்தி, தீனதயாளன், மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.