fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: 5வது முறையாக ஊரடங்கை நீட்டித்து கூடுதல் தளர்வுகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: 5வது முறையாக ஊரடங்கை நீட்டித்து கூடுதல் தளர்வுகள்

தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாள் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ குழு மற்றும் உயர் அதிகாரிகளு டன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் 21ம் தேதி முதல் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப் பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பரவல் 36 ஆயிரம் வரை இருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைக்க முதல் வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார்.

அதன்படி, கடந்த மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை தொடர்ந்து இரண்டு வாரங்கள் எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது.

தொடர்ந்து, கடந்த 7ம் தேதி முதல் வருகிற 21ம் தேதி (திங்கள்) அதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது.

அதன்படி காய்கறி, பலச ரக்கு, மீன், இறைச்சி, ஹார்டுவேர், சலூன், டீக்கடை, செல்போன், இரண்டு – நான்கு சக்கர பழுது பார்க்கும் கடைகள் உள்ளிட்டவைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவு ஊழியர்க ளுடன் அலுவலகங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ் மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டா லின் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து தற்போது தினசரி பாதிப்பு 9 ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது.

சென்னையில் தினசரி பாதிப்பு 500 என்ற அளவில் உள்ளது. கோவை, ஈரோடு மாவட்டத்தில் மட்டுமே 1000ஐ தாண்டியுள்ளது. இதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21ம் தேதி (திங்கள்) அதிகாலையுடன் முடிவடைகிறது.

இதையொட்டி, தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது மற்றும் பொது போக்குவரத்தை குறைந்த அளவில் (50 சதவீத இருக்கைகளுடன்) அனுமதிப்பது உள்ளிட்டவைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதில் தலைமை செயலாளர் வெ.இறை யன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் 5வது முறையாக ஊரடங்கை நீட்டித்து மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img