தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலு வலர் / குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் ஆணையர் (ம) தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், ஆட் சியர் மரு.கி.செந்தில்ராஜ் முன் னிலையில் பல்வேறு இடங்களில் நேற்று (நவ.18) செய் தியாளர்களுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அவர் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாநகராட்சி வரதராஜபுரம் சீர்மிகு அங்கன்வாடி மையத்தில் ஊட் டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மூலம் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை சரியாக உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மாநகராட்சி ரஹ்மத்துல்லாபுரம் அங்கன்வாடி மையம் மற்றும் போல்டன்புரம் கக் கன் பூங்கா அருகில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் விடுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறையின் இ-சேவை மையத்தின் மூலம் செயல்ப டுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் கழகம் மாவட்ட மருத்துவக் கிடங்கில் உள்ள மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஜின்பேக்டரி ரோடு மாநக ராட்சி நடுநிலைப்பள்ளியில் நடை பெறும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பயிலும் மாணவ/ மாணவிகளுக்கு பாடம் கற்பிப்பதை பார்வையிட்டு பாடங்கள் குறித்து கேட்டறியப்பட்டது. இவ்வாறு தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன் தெரிவித்தார்.
ஆய்வில் துத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், துத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தூத் துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.கு.சிவக்குமார், தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் செல்வகுமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.