வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாநகராட்சி, மண்டலம் 3 ஸ்மார்ட் சிட்டி மிஷன் 2020-21ன் கீழ் வார்டு எண்.31 மாருதி நகர், வடக்கு நகர், மாருதி நகர் நர்சிங் கல்லூரி சாலை எக்ஸ்டன்சன் சாலை ஜெய்பாலாஜி நகர் குறுக்கு வீதி, டெலிகாம்சிட்டி சாலைகள் மற்றும் ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டத்தின் கீழ் பழுதடைந்த சாலைகளை ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
உடன் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணணுண்ணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உட்பட பலர் உள்ளனர்.



