fbpx
Homeதலையங்கம்அடம் பிடிப்பது வேதனை அளிக்கிறது

அடம் பிடிப்பது வேதனை அளிக்கிறது

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த மாதம் தொலைபேசியில் உரையாடியதைத் தொடர்ந்து இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்க முன்வந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான ஐரோப்பிய கூட்டுறவு நாடுகளும் ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவின் காப்புரிமை விலக்கு கோரிக்கையை ஏற்றுக் கொள்ள இன்றும் கூட தயங்குகின்றனர். மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடத் தயங்குவதற்கும், அந்த துறையின் வருங்காலம் பாதிப்படையவும் காப்புரிமை தளர்வு வழிகோலும் என்பது அவர்களது அச்சம்.

காப்புரிமை தளர்வு பெறுவதாலேயே பிரச்சனை முடிந்து விடாது. தடுப்பூசி மருந்து தயாரிப்பு என்பது மிக அதிக அளவிலான மூலதனம் தேவைப்படும் தொழில் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காப்புரிமை தளர்வு வழங்கப்படுவதால் வளர்ந்து வரும் எல்லா நாடுகளும் தடுப்பூசி தயாரிப்பில் இறங்கிவிடும் என்றும் எதிர்பார்க்க முடியாது.
அதுமட்டுமல்ல, காப்புரிமை தளர்வு என்பது வேறு தொழில்நுட்ப உதவி வழங்குவது, தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களை பெறுவது, தயாரிப்பு கட்டமைப்பை உருவாக்குவது, தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வினியோகம் செய்வதற்கான கட்டமைப்பு என்று எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன.

உலகிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்றால் சுமார் 10 முதல் 15 பில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படும். அதுவும் அதிக காலதாமதம் இல்லாமல் இப்போது இருக்கும் தடுப்பூசி தயாரிப்பாளர்களால் ஈடு கொடுக்க இயலாது என்பது ஒன்று. அதனால் அவர்கள் பேராசைப்படுவது தவறு.

காப்புரிமை விலக்கு வழங்குவதால் அந்த பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இழப்பை எதிர்கொள்ளப் போவதில்லை. தடுப்பூசி தயாரிப்பாளர்களிடமிருந்து உரிமைத் தொகை கிடைக்கத் தான் போகிறது. கொள்ளை நோய்த் தொற்று காலத்தில் ஈவிரக்கம் இல்லாமல் அவர்கள் அடம் பிடிப்பது வேதனையளிக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img