ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பல்வேறு அணிகள் பல்வேறு கல்லூரிகளுக்கு இடை யேயான போட்டிகளில் தொடர்ந்து பரிசுகளைப் பெற்றன.
கபடி ஆண்கள் அணி மண்டலம்- கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் முதல் இடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகம் – மண்டலங்களுக்கு இடையேயான ஆடவர் போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றது.
குத்துச்சண்டை ஆண்கள் அணி பல்வேறு பிரிவுகளில் நான்கு தங் கம் மற்றும் மூன்று வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றது. பாரதியார் பல்கலைக்கழகம் – கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் குத்துச் சண்டை போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பையும் வென்றது.
பாரதியார் பல்கலைக்கழகம் – கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் குத்துச்சண்டை போட் டியில் பெண்கள் பளு தூக்கும் அணி தங்கம் மற்றும் வெள்ளி வென்றது.
பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக் கிடையேயான வாலி பால் போட்டியில் ஆண்கள் அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது – மண்டலம்-.
அகில இந்திய பல்கலைக்கழகங் களுக்கு இடையேயான குத் துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக பாரதியார் பல்கலைக்கழக குத்துச்சண்டை அணியை பிரதிநிதித்துவப்படுத்த மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நேரு இன்குபேஷன் சென்டரால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான ஸ்டார்ட் அப் கான்கால்வ் போட் டியில் எங்கள் ரத்தினம் குழு ஒன்று முதல் இடத்தையும், ரூ.2 லட்சம் மானியத்தையும் பெற்றது.
கோடிஸ்டாவில் நடந்த 11-வது கோயம்புத்தூர் டேக்வோண்டா சாம்பியன்ஷிப்பில் ரத்தினம் கல்லூரி அணிகள் மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றன.
கடந்த நவ.21 அன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த கோவிட்-19 மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான், திண்டுக்கல்லில் எஸ்டிஏடி (ஷிஞிகிஜி) ஏற்பாடு செய்ததில் ரத்தினம் கல்லூரியின் இரண்ட £ம் ஆண்டு மாணவர் தடகள வீரர் எஸ்.வேல் முருகன் 11.5 கிமீ மாநில அளவிலான மாரத்தான் போட்டியில் 4-வது இடத் தைப் பெற்றார்.
கடந்த நவ. 21 அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் தனுவர்ஷன் டிரஸ்ட் நடத்திய கோவிட்-19 விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மூன்றாம் ஆண்டு மாண வர் தடகள வீரர் கே.கௌதம் 20 கிமீ தேசிய மராத்தான் போட்டியில் 11-வது இடத்தைப் பெற்றார். சுகன் சுகா மாரத்தான் போட்டியில் முதலாம் ஆண்டு மாணவர் தடகள வீரர் பி.வி.ஜீவானந்தம் 10 கிமீ மாரத்தானில் 9-வது இடத்தைப் பிடித்தார்.
அகில இந்திய பல்கலைக்கழகங் களுக்கு இடையேயான கபடி போட்டிகள் – 2021-22 -ல் பங்கேற்க, பாரதியார் பல்கலைக்கழக கபடி அணியை பிரதிநிதித்துவப்படுத்த, ரத்தினத்தின் இரண்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பாரதியார் பல்கலைக்கழக கல் லூரிகளுக்கு இடையேயான தட களப் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் ரத்தினம் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர் எஸ்.வேல்முருகன் இரண்டாம் இடம் பெற்றார்.
வெற்றி பெற்றவர்களை ரத்தினம் குழுமத்தின் தலைவர் டாக்டர் மதன் ஏ.செந்தில், ரத்தினம் கல்லூரி சிஇஓ டாக்டர் ஆர்.மாணிக்கம், ரத்தி னம் கல்லூரி முதல்வர் டாக்டர் முரளிதரன், உடற்கல்வி இயக்குனர் மணிராஜ் ஆகியோர் பாராட்டி, கவுரவித்தனர்.



