ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2021 முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மேற்கொள்ளபட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர் பிரத்திக் தயாள், உதவி ஆட்சியர் (பயிற்சி) எகம் ஜெ.சிங் உட்பட பலர் உள்ளனர்.



