fbpx
Homeபிற செய்திகள்கொங்கு இயற்கை - யோகா மருத்துவ கல்லூரியில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி

கொங்கு இயற்கை – யோகா மருத்துவ கல்லூரியில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜூன் மாதம் 21-ல் நடைபெற இருக்கும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய அரசு ஆயுஷ் அமைச்சகம், டெல்லி மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் இணைந்து நூறு நாட்கள் – நூறு நிறுவனங்கள் திட்டத்தின்கீழ் 100 நகரங்களில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதில் 50வது தினத்தில் பெருந்துறை கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. யோகா பயிற்சியில் 600க் கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் “ஒரு பூமி ஒரு ஆரோக்கியம்“ என்ற தலைப்பில் இந்த ஆண்டு யோகா தினம் நடை பெறுவதால் உலக வடிவில் மாணவர்கள் தங்களை அணிவகுத்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர். இதில் கல்லூரி தாளாளர் ஏ.வெங்கடாச்சலம், முதல் வர் டாக்டர் சி.பிரதாப்சிங், துணை முதல்வர் டாக்டர் எஸ்.வி.ராஜரத்தினம், சிறப்பு விருந்தினர் டாக்டர்.அருண்துளசி, டாக்டர் என்.விஜயராகவன், டாக் டர் வசுந்தரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img