fbpx
Homeபிற செய்திகள்ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் இதயவியல் துறையின் பொன்விழா கொண்டாட்டம்

ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் இதயவியல் துறையின் பொன்விழா கொண்டாட்டம்

இதய சிகிச்சையில் 50 ஆண்டுகால அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இதயவியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை துறை நேற்று  இதய வடிவிலான சின்னத்தை அறிமுகப்படுத்தி தனது பொன்விழா கொண்டாட்டங்களைத் தொடங்கியது.

குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் துணைத் தலைவர் கோபிநாத், குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் அறங்காவலர் ஆதித்ய கிருஷ்ணா பதி, ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி, இதயவியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை துறையின் தலைமை ஆலோசகர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோரது முன்னிலையில் இந்த அமைப்பைத் திறந்து வைத்தார்.

இது குறித்து ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி கூறுகையில், “இந்த குறிப்பிடத்தக்க சின்னம், மருத்துவ மேலாண்மை மற்றும் மேம்பட்ட சிகிச்சை முறைகள் முதல் சிக்கலான இதய நோய் சிகிச்சைகள் மற்றும் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் வரை இதயம் சார்ந்த பிரச்னைளை கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் சிறந்து விளங்குவதற்கான எங்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

ஜி.கே.என்.எம். மருத்துவனையின் இதய பராமரிப்பு குழு, இதய சிகிச்சை மருத்துவர்கள். அறுவை சிகிச்சை நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஊழியர்களின் அயராத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் மைல் கல்லாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. மேலும் இக்கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக வருகிற 10 மற்றும் 11-ம் தேதிகளில் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் முன்னணி மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img