fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாசனத்துக்கு 120 நாட்கள் நீர் திறப்பு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாசனத்துக்கு 120 நாட்கள் நீர் திறப்பு

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

9,012 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:

 தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்காக விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று 9,012 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 18.12.2024 முதல் 16.04.2025 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் தற்பொழுது உள்ள நீர் அளவினை கொண்டும் நீர் வரத்தினை எதிர்நோக்கியும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 75 கன அடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 76 கன அடி வீதம் என மொத்தம் 151 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டத்திலுள்ள, பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சௌட்டஹள்ளி, தளிஹள்ளி, கால்வேஹள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஹள்ளி, எர்ரஹள்ளி, பெண்ணேஸ்வர மடம், காவேரிப்பட்டிணம், பாலேகுளி, மாரிசெட்டிஹள்ளி, நாகோஜனஹள்ளி, ஜனப்பரஹள்ளி (ஜெகதாப்) மற்றும் பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறும்.

கிருஷ்ணகிரி அணைகளின் நிலவரம் (18.12.2024) அணையின் தற்போதைய கொள்ளவு 1585.48 கன அடி (51.30 அடி), அணையின் நீர்வரத்து 475 கன அடியாகும். ஊற்றுக் கால்வாயில் 12 கனஅடியும், ஆற்றுமதகுகளில் 463 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. எனவே விவசாய பெருமக்கள் விவசாயத்திற்கு நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, நீர்வளத்துறை உதவி பொறியாளர் சையத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜமோகன், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் ரஜினிசெல்வம், வட்டாட்சியர் வளர்மதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட விவசாய பெருமக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img