கோவை அருகே வீரகேரளம் பாரத அன்னை மனவளர்ச்சி குன்றியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கோவை எலைட் அரிமா சங்கம் சார்பில் 75 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. விழாவில் சங்க தலைவர் கோவை மூத்தா வழக்கறிஞர் ஏ.ராஜேஷ் கண்ணா செயலாளர் சதீஷ்குமார்,, பொருளாளர் கிரிதரன்ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகி நிர்மலா, சாமி சம்பந்தம், ஆலால சுந்தரம், பொன்னம்பலம், சசி நாராயணன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.