தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட், ஒரு பெயர்பெற்ற பழைய தனியார் துறை வங்கியா கும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்ட இந்த வங்கி நூறு ஆண்டுகளுக் கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது.
இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 536 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவகங்களை கொண்டு சுமார் 50 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 1150வது ஏடிஎம், தூத்துக்குடி விமான நிலையத்தில் திறக்கப்பட்டது.
இந்த ஏடிஎம் சேவையை தமிழ்நாடு மெர்க்கன் டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன், விமான நிலைய இயக்குனர் ராஜேஸ் முன்னிலையில் பொது மக்களுக்கு அர்பணித்தார். விழாவில் பொதுமேலாளர் சூரியராஜ், மண்டல மேலாளர் ஆனந்த், வங்கியின் ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் கூறியதாவது: பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதன் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகத்தில் 1150வது புதிய ஏடிஎம்-ஐ துவக்கி உள்ளது. மேலும் அதிகமான ஏடிஎம் இந்தியா முழுவதும் திறந்திட திட்டமிடபட்டு இருக்கிறது.
இந்த புதிய ஏடிஎம் துவக்க விழாவின் மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இவ் வாறு அவர் பேசினார்.