fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் 57 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருவண்ணாமலையில் 57 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

1967-68ம் ஆண்டில் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற 120 முன்னாள் மாணவர்கள், நேற்று சந்தித்து நினைவுகளை பகிர்ந்தனர்.


இந்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, திருவண்ணாமலை அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மிகவும் உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் முன்னாள் மாணவர் சிவசங்கரன் வரவேற்பு உரையாற்ற விழாவை மாணவர்கள் உற்சாகமாகத் துவக்கினர்.

57 ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்த தருணத்தில், பலரும் கட்டியணைத்துக் கொண்டனர் கண்ணீர் நெகிழ்வும், சிரிப்பும் கலந்த மகிழ்வுடன் ஞாபகங்கள் பரிமாறப்பட்டன.


மேலும், மாணவர்கள் படித்த காலத்தில் இருந்த பரமசிவம் ஆசிரியர், தற்போதைய தலைமை ஆசிரியர் க்யூபட் ஆகியோரின் நினைவுகளை பகிர்ந்தனர்.


நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பன்னீர்செல்வம், பொன்னுசாமி, விஜய குமார், எர்னஸ்வில்லியம், வெங்கட்ராமன், முகமதுகவுஸ், சங்கர், சேகர், கங்காதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தங்கள் மாணவகால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அவர்களுடன் உறவினர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img