fbpx
Homeபிற செய்திகள்இப்போது வரை சராசரியைவிட அதிக மழை பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் இருப்பு- திருப்பூர் ஆட்சியர்...

இப்போது வரை சராசரியைவிட அதிக மழை பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் இருப்பு- திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் தகவல்

திருப்பூர் மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவை விட 11.49 மி.மீ. கூடுதலாக மழை பெய்துள்ளது. பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளதாக ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (மே 30) விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:
விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல் படுத்தி வருகிறார் முதல்வர்.

மழை பொழிவு

திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மி.மீ அளவு. மே மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 73.70 மி.மீ. நடப்பு 2023-ம் ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 85.19 மி.மீ. ஆகும். இது சராசரி மழை பொழிவை விட 11.49 மி.மீ. அதிகமாகும்.

பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளன.
நெல் 0.099 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 7.11 மெட்ரிக் டன், பயிறு வகை பயிறுகள் 41.37 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள் 3.83 மெட்ரிக் டன் இருப்பிலுள்ளது.

அமராவதி அணையி லிருந்து நீர் வரத்து தொடங்கியதால் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் வட்டாரங்களில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களை தயார் செய்து உள்ளனர்.
கீழ் பவானி பாசன பகுதிகளான காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் நெல் சாகுபடி சம்பா பருவத்தில் தொடங்கப்படவுள்ளது.

நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள்
தேவையான அளவு இருப்பில் உள்ளன. யூரியா 2240 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1331 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5103 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 665 மெட்ரிக் டன் அளவு இருப்பில் உள்ளன என்றார் ஆட்சியர்.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முந்தைய கூட்டங்களில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக மாவட்ட ஆட்சியர், மனுதாரர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்ன. விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் கால தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்.

விவசாயிகளிடமிருந்து 175 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யின் சார்பில் அமைக்கப் பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை ஆட்சியர் பார்வையிட்டார்.

மாவட்ட வரு வாய் அலுவலர் த.ப.ஜெய் பீம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் /மாவட்ட வருவாய் அலுவலர் கே.சண்முகநாதன், திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாரயணன், இணை இயக்குநர் (வேளாண்மை) மா.மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ.லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளார் (வேள £ண்மை) கிருஷ்ணவேணி, துணை ஆட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img