திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குணம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திரு.சுந்தரேசன் என்ற பயனாளியின் வீட்டின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட ஆய்வு செய்து பணிகளை தரமானதாகவும், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து நெடுங்குணம் ஊராட்சியில் பதினைந்தாவது நிதி குழு திட்டத்தின் கீழ் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள துணை சுகாதார கட்டிடத்தை பார்வையிட்டு, கட்டிடத்தின் உட் கட்டமைப்பு, கழிவறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ச்சியாக, பெரணமல் லூர் ஊராட்சி ஒன்றியம், மேலத்தாங்கல் ஊராட்சியில் வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2024-25ன் கீழ் ரூ.11 லட்சத்து 5 ஆயிரத்து 59 மதிப்பீட்டில் வேலன் குளம் ஆழப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளதை பார் வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலதாங்கல் ஊராட்சியில் ரூபாய் 3.10 லட்சம் மதிப்பீட்டில் கன்னியப்பன் என்பவரின் மனைவி ஜெகதீஸ்வரி என்ற பயனாளியின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டப்பட்டு வருவதை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், கள ஆய்வின்போது பள்ளி கல்வியை இடை நின்ற நெடுங்குனம் பழங்குடி நகரைச் சேர்ந்த மாணவன் எஸ்.ஆர்யா த/பெ.சஞ்சய் காந்தி (ஆறாம் வகுப்பு), மாணவி ராஜராஜேஸ்வரி த/பெ.ரமேஷ் (ஆறாம் வகுப்பு) மற்றும் மாணவி வைதேகி, த/பெ.தாஸ் (ஒன்பதாம் வகுப்பு) ஆகியோர்களுக்கு கல்வி கற்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து புத்தகம் மற்றும் பள்ளி சீருடைகள் வழங்கி நெடுங்குணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை தொடர மாவட்ட ஆட்சித்தலைவர் நடவ டிக்கை மேற்கொண்டார்கள்.
அதன் தொடர்ச்சியாக மேலத்தாங்கல் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.223.98 இலட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தி னார்கள்.
மேலும் அனைத்து ஊராட்சி களிலும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நீண்ட நாட்களாக வீடு கட்டும் பணியினை மேற்கொள்ளாத பயனாளிகள் குறித்த விவரத்தை கேட்டறிந்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மூலமாக அந்த பயனாளிகளை வீடு கட்டும் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர் மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலு வலர்கள் கலந்துகொண்டனர்.