குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி அமைப்பு இணைந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத காலநிலையை எதிர்கொள்ள கூடிய ஸ்மார்ட் பால் பண்ணை தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தை 2024 டிசம்பர் மாதத்தில் துவங்கின.
இதன் கீழ் 112 பால் பண்ணை தொழில்முனைவோருக்கு பால் மற்றும் கால்நடை மேம்பாட்டு தொடர்பாக 3 மாத தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டது.
மேலும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பால் பண்ணை யாத்திரை எனும் கற்றல் பயணம் 2025 ஏப்ரல் முதல் மே வரை நடைபெற்றது.
கோயம்புத்தூரில் இருந்து தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் பின்பற்றப்படும் பால் பண்ணை தொடர்பான சிறப்பான நடைமுறைகள் பற்றி இத்துறை சார்ந்த தொழில் முனைவோர் அறிந்துகொள்ள சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஸ்மார்ட் பால் பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் முக்கிய அங்கமாக இந்த பயண நிகழ்வு நடத்தப்பட்டது.
இதன் கீழ், 40க்கும் மேற்பட்ட பால் பண்ணை தொழில்முனைவோர் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் 5,000 கி.மீ.க்கும் மேற்பட்ட தூரம் பயணம் செய்து பால் பண்ணையில் முன்னணி கண்டுபிடிப்புகளை ஆராய்ந்தனர்.
இந்த திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி, சென்னை கால்நடை மருத்துவக்கல்லூ ரியில் நேற்று நடை பெற்றது. இந்நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கல்லூரியின் டீன் டாக்டர் சி.சவுந்தரராஜன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறி வியல் பல்கலைகழக துணைவேந்தர் (பொ) டாக்டர் கே என்.நரேந்திர பாபு, குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர், குமரகுரு கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி திட்ட மேலாளர் தனம்மாள் ரவிச்சந்திரன், உதவி துணைத் தலைவர் சரவணன் மற்றும் பால் பண்ணை தொழில் முனை வோர்கள் பங்கேற்று பேசினர்.
இதில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையுடன் குமரகுரு கல்வி நிறுவ னங்கள் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.
அமைச்சர் மனோதங்கராஜ் பேசுகையில், “தமிழ்நாடு இந்தியாவின் அடுத்த வெண்மை புரட் சிக்கு வழிகாட்ட தயாராக உள்ளது. பசுமையான அனைவரையும் உள்ள டக்கிய விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கும் ஒரு வெண்மை புரட்சியாக அது இருக்கும்“ என்றார்.