காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து கொள் ளிடம் ஆற்றுப்பகு தியில் திடீர் ஆய்வு மேற் கொண்ட கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் வெள்ள பாதுகாப்பு மையங்களையும் பார் வையிட்டார்.
காவிரி நீர்பிடிப்பு பகுதி களில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1லட் சத்து 34 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது.தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 109 அடியாக உள்ள நிலையில் நேற்று பாச னம் மற்றும் குடிநீருக்காகவும் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டும் மேட்டூர் அணையில் இருந்து விநா டிக்கு 12 ஆயிரம் கன தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதி யில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடு கிறது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட் டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் நேற்று மதியம் சிதம்பரம் தாலுகாவுக்குட்பட்ட பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், கீழ குண்டலப்பாடி, அக் கரை ஜெயங்கொண்டப்பட்டிணம் ஆகிய கிராம பகுதிக ளுக்கு சென்று மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரால் கொள்ளிடம் ஆற்றில் ஏற்ப டும் பாதிப்பு மற்றும் வெள்ள தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு, திட்டுக் காட்டூர், கீழக் குண்டலப் பாடி, அக்கரை ஜெயங் கொண்டப்பட்டிணம் ஆகிய பகுதியில் உள்ள வெள்ள பாதுகாப்பு மையங்களை பார்வையிட்ட அவர் தொடர்ந்து அக்கரை ஜெயங்கொண்டப் பட்டடினத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்காக கருங்கற்களால் போடப்பட்டுள்ள வெள்ள தடுப்பு சுவரையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது சிதம்பரம் சப்-கலெக்டர் ராஷ்மிராணி, அணைக்கரை நீர் வளத்துறை உதவி செயற் பொறியாளர் கொளஞ்சிநா தன்,வல்லம்படுகை பிரிவு உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.