ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தலைமை தாங்கி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் முன்னிலையில் கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் கோடை விழாவினை நேற்று துவக்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார், துணை மேயர் தாமரைசெல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணியகோட்டி, வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன்,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர். பாலகணேஷ், மாநகராட்சி ஆணையர் கிஷன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



